‘வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணிக் குழு’ குறித்து மூத்த அரசியல் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம், புலிகளின் ஏக தலைமைத்துவத்தை நிராகரிக்கும் ஜனநாயக சக்திகள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ‘செயலணிக் குழு’ குறித்து தனது சொந்த அபிப்பிராயத்தை திரு ஆனந்தசங்கரி அவர்கள் முதிற்சியற்ற முறையில் வெளியிட்டுள்ளதாக கருதும் நாம் இவ்வாறான பத்திரிக்கை அறிக்கைகள், புலிகள் தமது அரசியல் இருப்பை தொடர்ந்து தக்கவைப்பதற்காக செய்யும் வெறும் அழிவு யுத்தத்திற்கு எதிராக பரந்தளவில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றுத் தமிழ் ஜனநாயக சக்திகளின் கூட்டு வேலைத் திட்டங்களை பலவீனப்படுத்தக் கூடியவை என்பதையும் இடித்துரைக்க விருப்புகிறோம்.
தமிழ் மக்களை தமது கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் ‘புலிகளின் ஏக தலைமைத்துவம்’ என்பது எவ்வாறு பாசிச அரசியலைக் கொண்டுள்ளதோ சற்று ஏறக்குறைய ‘மாற்று ஏக தலைமைத்துவம்’ என்பதும் அவ்வாறான நோய்க்கூறு கொண்ட அரசியல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட ‘செயலணிக் குழு’ இன்னும் விரிந்த பன்முகத்தன்மை வாய்ந்ததாக அமைய வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லையெனினும், திரு ஆனந்தசங்கரி அவர்கள் சொல்ல முனைந்த ‘ஜனநாயக அரசியல் நியமம்’ அவரது தவறான வெளிப்பாட்டு முறையினால் பயனற்றுப் போய்விடக்கூடிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
புலிகள் தமிழ் மக்கள் மீது சுமத்தியுள்ள அழிவுப் போரையும் புலிகளை ஏக தலைமையாக வரித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலையும் தோற்கடிக்க வேண்டிய மிக முக்கியமான இக்கால கட்டத்தில் அனைத்து மாற்றுத் தமிழ் ஜனநாயக சக்திகள் விரிந்த அரசியல் கூட்டு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முன்வருமாறு அறைகூவல் விடுகிறோம்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)
Tuesday, 3 June 2008
Sunday, 18 May 2008
கெளரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)
மூவின மக்களும் சரிசமமாக வாழும் கிழக்கிலங்கை மாகாண சபையின் எதிர்காலம் மொத்த இலங்கையின் அரசியல் கலாச்சாரத்துக்கு புதிய முன்னுதாரணமாகத் திகழப்போகிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கிழக்கு மண்ணில் ஜனநாயக மீட்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு அவர்களது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கிய மைல்கல்லாகும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினதும் அதன் அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வெற்றிக்கு உழைத்த தலைவர்களில் ஒருவரான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டமை கடந்த கால் நூற்றாண்டுகளாக போரில் தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு வெறும் கையுடன் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்இ முஸ்லிம் மக்கள் இடையில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூவின இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பாரிய அரசியல் கடமையை முன்வந்து சிரமேற்றுள்ளார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மாகாண சபைத் தேர்தலில் உறுதியாக கடைப்பிடித்த ஜனநாயக நியமங்களை தொடர்ந்தும் இடைவிடாது பின்பற்றுவதன் மூலமே சிறந்த தலைமையை கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தர முடியும் என்பதையும் நாம் இங்கு குறிப்பாகக் கோடிட்டுக்காட்ட விருப்புகிறோம். இத்தருணத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோதெரிவித்துக்கொள்கிறது. - 18ஃ05ஃ2008
மூவின மக்களும் சரிசமமாக வாழும் கிழக்கிலங்கை மாகாண சபையின் எதிர்காலம் மொத்த இலங்கையின் அரசியல் கலாச்சாரத்துக்கு புதிய முன்னுதாரணமாகத் திகழப்போகிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கிழக்கு மண்ணில் ஜனநாயக மீட்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு அவர்களது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கிய மைல்கல்லாகும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினதும் அதன் அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வெற்றிக்கு உழைத்த தலைவர்களில் ஒருவரான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டமை கடந்த கால் நூற்றாண்டுகளாக போரில் தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு வெறும் கையுடன் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்இ முஸ்லிம் மக்கள் இடையில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூவின இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பாரிய அரசியல் கடமையை முன்வந்து சிரமேற்றுள்ளார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மாகாண சபைத் தேர்தலில் உறுதியாக கடைப்பிடித்த ஜனநாயக நியமங்களை தொடர்ந்தும் இடைவிடாது பின்பற்றுவதன் மூலமே சிறந்த தலைமையை கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தர முடியும் என்பதையும் நாம் இங்கு குறிப்பாகக் கோடிட்டுக்காட்ட விருப்புகிறோம். இத்தருணத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோதெரிவித்துக்கொள்கிறது. - 18ஃ05ஃ2008
Wednesday, 14 May 2008
புலிகளின் தாங்கு பாலம் தகரும் அபாயம்!! ரெலோ உறுப்பினர்கள் ஜேர்மனியில் ஒன்று கூடல். -பீமன்
May 14, 2008http://athirady.com/?p=18859#more-18859
தமிழீழக் கோரிக்கை பாசிசத்தீயில் எரிந்து நாசமாகி 22 வருடங்களின் பின்பு ஜேர்மனி நாட்டில் டோட்முண்ட் எனும் இடத்தில் அதன் நினைவுகள் மீட்டப்பட்டன. மிகவும் அமைதியான அந்த இடத்தில் ஆரவாரங்கள் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்வில் ஒரு மூலையில் இருந்து அவதானித்து கொண்டிருந்த போது பல விதமான உணர்வுகள் மோதிக் கொள்வதை உணரக் கூடியதாக இருந்தது. மிகவும் எளிமையாக காணப்பட்ட அந்த மண்டபத்தில் எவ்வித அலங்காரங்களும் அற்ற ஓர் மேசையில் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த வீர மைந்தர்கள் என அழைக்கப்படும் மரணித்த ரெலோ போராளிகளின் புகைப்படங்கள் சில சற்று உயரத்திலும் அதன் கீழ் அதன் தலைவர் தோழர் சிறி சபாரட்ணத்தின் உருவப்படமும் காணப்பட்ட போது, அதன் தலைவர் என்றுமே தன் போராளிகளை தனக்கும் மேலாகவே கருதியிருக்கின்றார் என எண்ணத் தோன்றியது.
தமிழீழக் கோரிக்கை பாசிசத்தீயில் எரிந்து நாசமாகி 22 வருடங்களின் பின்பு ஜேர்மனி நாட்டில் டோட்முண்ட் எனும் இடத்தில் அதன் நினைவுகள் மீட்டப்பட்டன. மிகவும் அமைதியான அந்த இடத்தில் ஆரவாரங்கள் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்வில் ஒரு மூலையில் இருந்து அவதானித்து கொண்டிருந்த போது பல விதமான உணர்வுகள் மோதிக் கொள்வதை உணரக் கூடியதாக இருந்தது. மிகவும் எளிமையாக காணப்பட்ட அந்த மண்டபத்தில் எவ்வித அலங்காரங்களும் அற்ற ஓர் மேசையில் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த வீர மைந்தர்கள் என அழைக்கப்படும் மரணித்த ரெலோ போராளிகளின் புகைப்படங்கள் சில சற்று உயரத்திலும் அதன் கீழ் அதன் தலைவர் தோழர் சிறி சபாரட்ணத்தின் உருவப்படமும் காணப்பட்ட போது, அதன் தலைவர் என்றுமே தன் போராளிகளை தனக்கும் மேலாகவே கருதியிருக்கின்றார் என எண்ணத் தோன்றியது.
நிகழ்வுகள் ஆரம்பாமாவதற்கு சற்று முன்னதான நேரம் அது, நபர்கள் ஒருவர் இருவராக மண்டபத்தின் உள் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஓருவரை ஒருவர் கை குலுக்கி வரவேற்று கொண்டார்கள. அவர்கள் அவ்வாறு கைகுலுக்கிய போது அவர்களது கண்கள் மிகவும் நேராக ஒருவரை ஒருவர் நோக்கிய கணப்பொழுதுகளில் கடந்த 22 வருட சோக நினைவுகள் பரிமாறப்பட்டதை உணர முடிந்தது.
சட்டென்று அங்கு ஓர் அமைதி நிலவியது. நிகழ்வுகள் ஆரம்பமாயின, ஒருவர் நிகழ்ச்சி நிரலை வாசித்தார். முதலில் குத்து விளக்கேற்றுவதென்றும் அதனை தொடர்ந்து அனைவரும் வீர தீபமேற்றி வீர மைந்தர்களுக்கு அஞ்சலி செலுத்துவதென்றும் அடுத்து அவர்களது நினைவுகளை பகிர்ந்து கொள்வதென்றும் அதைத்தொடர்ந்து இன்றைய ரெலோவின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் அனைவரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதெனவும் கூறினார்.
அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த தோழர் சிறி சபாரட்ணத்தின் படத்தின் முன்பிருந்த இரு குத்து விளக்குகளுக்கு இருவர் சுடரேற்ற குழுமியிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக சென்று வீர தீபமேற்றி தமது வீர அஞ்சலிகளை செலுத்திய விதம் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.
தொடர்ந்து கருத்துப் பகிர்வுகள் ஆரம்பமாகின. அனைவரது கருத்துக்களும் புலிகளை எதிர்பதாகவும் புலிகளின் பாசிச செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதாவும் இருந்தது.
அங்கு ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கை எம் மக்களுக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே அமைய வேண்டும் என்று கூறகின்றது எனவும், அரசியல் அரங்கில் மக்களின் தெரிவுக்காக பல கட்சிகள் தேவை என்றும, அந்த வகையில் இலங்கையில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளுடனும் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவையிருப்பதால் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் பெயரில் உள்ள ஈழம் என்கின்ற பிரிவினைவாத சொற்பதம் நீக்கப்பட்டு பெயரில் கூட ஒரு மாற்றம் ஏற்படுவது ஒரு நல்ல சமிக்கையாக அமையும் எனவும் தெரிவித்தார். அக்கருத்து அங்கு பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படித்தியிருந்ததுடன் இவ்விடயம் சம்பந்தமாக தொடர்ந்து வரும் கூட்டத்தொடர்களில் விவாதிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஒருவர் இலங்கையில் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அங்கு புலிகள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என்றும் அதனடிப்படையில் அனைத்து மக்களும் இன, மத, மொழி, அரசியல் பேதங்களுக்கப்பால் ஒன்றுபட வேண்டும் என்றும் தெரிவித்தார், அக்கருத்து அங்கு குழுமியிருந்தவர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்பட்ட போதும் அதற்கெதிரான தனது கருத்தை முன்வைத்த ஒருவர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டால் யார் மக்களை காப்பாற்றுவது? என்ற கேள்வியை எழுப்பிய போது அதற்கு பதிலளித்த நபர் கூறுகையில் இன்று எமது மக்களினுடைய பிரச்சினைகள், அவற்றின் தீர்வுக்கான முட்டுக்கடை;டைகள் யாவுமே புலிகளினது ஏக பிரதிநிதித்துவ மோகமும் அவர்களது பாசிசப் செயல்பாடுகளுமுமேயாகும் என்றதுடன் புலிகள் இல்லாதொழிக்கப்படும் பட்சத்தில் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சுய தொழில் செய்வதாகவும் அவர்கள் வியாபாரங்களில் அபிவிருத்தியடைந்து மிகவும் வசதியாக உள்ளதாகவும் இன்று இலங்கையில் புலிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற கப்பம் வாங்குகின்ற செயல்பாடுகள் முடிவுக்கு வந்து ஒர் நிரந்தர சமாதானம் வருமாக இருந்தால் இத்தனை மக்களும் இலங்கையில் முதலீடு செய்யும் போது எம் மக்களின் ஏராளமான பிரச்சினைகள் முடிவுக்கு வருமெனவும் தெரிவித்தார்.
இறுதியாக அங்கு ரெலோ அமைப்பின் ஆரம்பாகால வரலாறுகள், தவறுகள், இன்று புலிகளை ஆதரித்து செல்கின்ற ரெலோ தலைமையை ஏற்று தொடர்ந்தும் செயல் படுவதா? அன்றேல் அதற்கான மாற்று வழிகள் யாவை? ஏன்கின்ற விடயங்களில் பலத்த வாதப் பிரதிவாதங்கள் மிகவும் காரசாரமாக இருந்தது. இன்றைய தலைமையை எதிர்ப்பதென்று கூறிய பலர் தலைமை மீது பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.
இதில் குறிப்பாக இன்றைய தலைமை புலிகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அது புலிகள் ரெலோ இயக்க போராளிகளுக்கு இழைத்த துரோகங்களை மறந்து அப் போராளிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்தி துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறினர். மேலும் இன்றைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புலிகளின் பணத்திற்காக 1984 லேயே சோரம் போனவர் என்றும் அவர் ரெலோவின் தலைமையை அழித்து இவ்வியக்க தலைமையைக் கைப்பற்றுவதற்காக பல துரோகங்களை இழைத்துள்ளார் என்றும், எமது பல போராளிகள் கொல்லப்படுவதற்கான காரணகர்த்தாவாக இவர் இருந்துள்ளார் என்றும் உதாரணத்திற்கு ஒன்றை கூறுவதானால் இந்தியாவில் இருந்து எமது பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் காந்தன் 20 போராளிகளுடன் எமது இயக்க தோழர்களை காப்பாற்றுவதற்காக இலங்கையை நோக்கி படகில் புறப்பட்டிருந்த தருணத்தில் அவரது திட்டங்களையும் எங்கு இறங்க இருக்கின்றனர் என்ற தகவல்களையும் புலிகளுக்கு அனுப்பியிருந்தார். அதன் பிரகாரம் மன்னார் இறங்கு துறையில் வைத்து தோழர் காந்தனையும் (வைத்தியர்) 20 போராளிகளையும் மடக்கி பிடித்த புலிகள் அவ் இருபது போராளிகளையும் அந்த இடத்திலேயே வெட்டியும் கொத்தியும் குத்தியுமாக கோரமாக படுகொலை செய்ததுடன் தோழர் காந்தனை (வைத்தியர்) அவரது சொந்த இடமான நெடுங்கேணிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவருக்கு மொட்டை அடித்து கரும் புள்ளி செம் புள்ளி குற்றி களுதையில் ஏற்றி மக்கள் மத்தியில் வெட்டி கொலை செய்திருந்தமையை சுட்டிக் காட்டினர். இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் செல்வம் மீது அடுக்கப்பட்டன.
இதில் குறிப்பாக இன்றைய தலைமை புலிகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அது புலிகள் ரெலோ இயக்க போராளிகளுக்கு இழைத்த துரோகங்களை மறந்து அப் போராளிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்தி துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறினர். மேலும் இன்றைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புலிகளின் பணத்திற்காக 1984 லேயே சோரம் போனவர் என்றும் அவர் ரெலோவின் தலைமையை அழித்து இவ்வியக்க தலைமையைக் கைப்பற்றுவதற்காக பல துரோகங்களை இழைத்துள்ளார் என்றும், எமது பல போராளிகள் கொல்லப்படுவதற்கான காரணகர்த்தாவாக இவர் இருந்துள்ளார் என்றும் உதாரணத்திற்கு ஒன்றை கூறுவதானால் இந்தியாவில் இருந்து எமது பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் காந்தன் 20 போராளிகளுடன் எமது இயக்க தோழர்களை காப்பாற்றுவதற்காக இலங்கையை நோக்கி படகில் புறப்பட்டிருந்த தருணத்தில் அவரது திட்டங்களையும் எங்கு இறங்க இருக்கின்றனர் என்ற தகவல்களையும் புலிகளுக்கு அனுப்பியிருந்தார். அதன் பிரகாரம் மன்னார் இறங்கு துறையில் வைத்து தோழர் காந்தனையும் (வைத்தியர்) 20 போராளிகளையும் மடக்கி பிடித்த புலிகள் அவ் இருபது போராளிகளையும் அந்த இடத்திலேயே வெட்டியும் கொத்தியும் குத்தியுமாக கோரமாக படுகொலை செய்ததுடன் தோழர் காந்தனை (வைத்தியர்) அவரது சொந்த இடமான நெடுங்கேணிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவருக்கு மொட்டை அடித்து கரும் புள்ளி செம் புள்ளி குற்றி களுதையில் ஏற்றி மக்கள் மத்தியில் வெட்டி கொலை செய்திருந்தமையை சுட்டிக் காட்டினர். இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் செல்வம் மீது அடுக்கப்பட்டன.
இறுதியில் இவை சம்மந்தமாக தொடர்ந்து கூடி கலந்துரையாடுவதென முடிவெடுத்து அதன் விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக மூவர் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தனர்.
Tuesday, 13 May 2008
முப்பதாண்டு அரசியல் பணிக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.
சமூக நலத்துறை அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சு ஆலோசகரும்இ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் 13ஃ05ஃ2008 அன்று இரவு 8 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அந்திமகால சுகயீனத்தில் இருக்கும் தனது தாயாரான இளைப்பாறிய ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை மிக நீண்ட காலத்தின் பின் ஐரோப்பாவில் வசித்த தனது சகோதரர்களோடு சில தினங்கள் உடனிருந்து பராமரிக்க சென்ற அவரை கரவெட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து புலிகள் பலி கொண்டுள்ளனர்.
மனித கௌரவத்திற்கான மன்றத்தின் செயலாளராக இருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் வீச்சம் பெற்ற 1980களின் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து உழைத்தவர். 1990களின் ஆரம்பத்தில் இலங்கை சிறைகளில் சாதாரண பிணை மூலம் வெளியில் வரக்கூடிய கைதிகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலைகாக அயராது பணியாற்றியவர். 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தன்னை முழுமையாக இணைந்து புலிகளால் கொல்லப்படும் வரை பணியாற்றி வந்தவர்.
வகை தொகையில்லாமல் தொடரும் புலிகளின் கொலைப் பட்டியல் மக்களுக்காக தொண்டாற்றிய இன்னொரு மனித உரிமை வாதியை காவு கொண்டுள்ளது. சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் கோர மரணம் எம்மை நோக்கி எழுப்பும் கேள்வி 'புலிகளின் ஏக தலைமைத்துவ பாசிசம்' இன்னும் எத்தனை விலைமதிப்பில்லா மனித உயிர்களை பலி கொள்ளப் போகிறது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?
செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர்இ உறவினர்கள்இ நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அரசியல் பணி ஆற்றிய அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)
அந்திமகால சுகயீனத்தில் இருக்கும் தனது தாயாரான இளைப்பாறிய ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை மிக நீண்ட காலத்தின் பின் ஐரோப்பாவில் வசித்த தனது சகோதரர்களோடு சில தினங்கள் உடனிருந்து பராமரிக்க சென்ற அவரை கரவெட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து புலிகள் பலி கொண்டுள்ளனர்.
மனித கௌரவத்திற்கான மன்றத்தின் செயலாளராக இருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் வீச்சம் பெற்ற 1980களின் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து உழைத்தவர். 1990களின் ஆரம்பத்தில் இலங்கை சிறைகளில் சாதாரண பிணை மூலம் வெளியில் வரக்கூடிய கைதிகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலைகாக அயராது பணியாற்றியவர். 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தன்னை முழுமையாக இணைந்து புலிகளால் கொல்லப்படும் வரை பணியாற்றி வந்தவர்.
வகை தொகையில்லாமல் தொடரும் புலிகளின் கொலைப் பட்டியல் மக்களுக்காக தொண்டாற்றிய இன்னொரு மனித உரிமை வாதியை காவு கொண்டுள்ளது. சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் கோர மரணம் எம்மை நோக்கி எழுப்பும் கேள்வி 'புலிகளின் ஏக தலைமைத்துவ பாசிசம்' இன்னும் எத்தனை விலைமதிப்பில்லா மனித உயிர்களை பலி கொள்ளப் போகிறது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?
செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர்இ உறவினர்கள்இ நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அரசியல் பணி ஆற்றிய அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)
புரட்சிக்கனல் தமிழீழ நாயகன் அமரர் சிறீ சபாரெத்தினம் (தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம்)
22 வது ஆண்டு நினைவு அஞ்சலி06 - 05 - 2008
முதல் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தமிழீழ தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி வழிவந்த தங்க தலைவனே!
1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அடக்கி அனாதைகளாக இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்த முற்பட்டபோது தமிழ் அரசியல் தலைவாகளின் அகிம்சை வழிப் போராட்டங்கள் பலனளிக்காமல் போக அறுபதுகளின் கடைசியில் தமிழ் இளைஞர்கள் ஆயதப்போராட்டத்தில் குதிக்கும் நிலைமை உருவானது.
1970 களின் ஆரம்பகாலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிங்கள அரசுக் கெதிராக வீறு கொண்டெழுந்த 42 தமிழ் இளைஞர்களைக் கைது செய்து விசாரணைகள் இல்லாமல் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதைகளை மேற்கொண்டது. துளபதி குட்டிமணி, பரந்தன் ராஐன் சந்ததியார், தங்கமகேந்திரன், நித்தியானந்தன் என நீளும் அந்த 42 பெயர்களைக் கொண்ட பட்டியலில் நீங்களும் ஒருவராக இருந்து சிங்களப் பேரினவாதத்தின் பல முகங்களில் ஒன்றான சிறைக் கொடுமைகளையும் அனுபவித்து நெஞ்சில் உரம் ஏற்றிக் கொண்டீர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டவரலாற்றில் இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய நீர்வேலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து தமிழ் ஈழத்தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, தேவன் உட்படப் பல போராளிகள் 1981 இல் கைது செய்யப்பட்டு 1983 இல் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டபின், “ என்றும் எங்கள் தலைவன் தங்கத்துரை “ என்ற கோஷத்துடன் இயக்கத்தைக் கட்டிக் காத்து சமகால இயக்கங்களுடன் ஏற்படும்போது முன்னிலை வகிக்கும் பல தாக்குதல்களை மக்களின் பாதுகாப்புடன் நடாத்தி சிங்கள அரசு இயந்திரத்தை ஆட்டங்காண வைத்து தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டீர்கள்.
தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டபோது இருந்த அதே இராணுவக் கெடுபிடிகள்தான் இன்றும் யாழ்மண்ணில் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. 1995 இல் இரவோடிரவாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அங்கே திரும்பச் செல்லும் சூழ்நிலைகள் உருவாக்கப்படவில்லை. சுமார் 38 ஆண்டு காலப்போராட்டம் யாழ்மண்ணிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும் சாதித்த சாதனைகள்தான் என்ன என்பது இன்று பெரியதொரு கேள்விக்குறியாக மாறி நெஞ்சில் உதிரத்தை கொட்டவைக்கிறது.
களநிலவரங்கள் நாளும் கவலைதருவனவாகவே இருக்கின்றன. நாளை விடியும் நமக்கெல்லாம் ஒரு வாழ்வு மலரும் என்று கண்ட கனவுகள் பொய்த்துப்போகுமோ என்று எண்ணிக்கலங்கும் அளவிற்கு சர்வதேச அழுத்தங்களும் உட்கட்சிப்போராட்டங்களும் தலைவிரித்து ஆடுகின்றன. தமிழன்னையின் பல்லாயிரக்கணக்கான செல்வங்கள் தங்கள் உயிர் உடைமைகளைத் துறந்து கட்டிஎழுப்பிய இந்தப்போராட்டம் கருகிப்போகாமலிருக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒருமித்த கருத்துடனும் தூயதமிழ் உணர்வுடனும் போராட்டம் நடத்தினாலே தவிர போராட்டம் வெற்றிபெறும் சாத்தியமில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்துகொண்டு ஏகோபித்த இயக்கமாக அல்லாமல் ஏகோபித்த தமிழர்களாக ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம்.
1981 இல் தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப்போராட்ட வீரர் nஐகன் ஆகியோரின் மணற்காட்டுக் காட்டிக் கொடுப்புடன் தமிழீழ விடுதலை இயக்கம் அழிந்துவிடும் என்று கனவு கண்டவர்களின் எண்ணங்களில் இடி விழுந்ததுபோல தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி எழுப்பிய விதம் கண்டு மலைத்துப்போனவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே குளிர்பானத்தில் நஞ்சூட்டிக் கொலை செய்ய முயன்ற முயற்சிகளும் தோற்றுப்போக, ஈழத்தேசிய விடுதலை முன்னனியில் நான்காவதாக வந்து நாமும் இணைகிறோம் என்று நாடகமாடி, உட்கட்சிப் போராட்டத்தில் சகதோழர்களின் உயிர்கள் பாதுகாக்கப் படுவதற்காக ஆயுதங்கள் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருந்தவேளையில் தொடுத்த தாக்குலில் நீங்கள் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டீர்கள்.
தாயக விடுதலையொன்றே தாரக மந்திரமாகக்களத்திலே போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் ஒற்றுமையின் பெயரால் ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு அரசியல் வறுமை காரணமாக ஸ்ரீலங்கா அரசு செய்து முடிக்கவேண்டிய வேலையைத் தாமே செய்துமுடித்து எதிரியின் கைகளைப் பலப்படுத்திப் போராட்டத்தைச் சிதைவடையச்செய்த தமிழின விரோதசக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தலைவனுக்கும், தமிழீழ மண் மீPட்புப்போராட்டத்தில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்துப்போராளிகளுக்கும் எமது வீரவணக்கங்கள்.
“என்றும் எங்கள் தலைவர் தேசபிதா தங்கத்துரை, கொள்கைக்குன்றம் தளபதி குட்டிமணி”
தமிழீழ விடுதலை இயக்கம.
முதல் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தமிழீழ தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி வழிவந்த தங்க தலைவனே!
1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அடக்கி அனாதைகளாக இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்த முற்பட்டபோது தமிழ் அரசியல் தலைவாகளின் அகிம்சை வழிப் போராட்டங்கள் பலனளிக்காமல் போக அறுபதுகளின் கடைசியில் தமிழ் இளைஞர்கள் ஆயதப்போராட்டத்தில் குதிக்கும் நிலைமை உருவானது.
1970 களின் ஆரம்பகாலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிங்கள அரசுக் கெதிராக வீறு கொண்டெழுந்த 42 தமிழ் இளைஞர்களைக் கைது செய்து விசாரணைகள் இல்லாமல் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதைகளை மேற்கொண்டது. துளபதி குட்டிமணி, பரந்தன் ராஐன் சந்ததியார், தங்கமகேந்திரன், நித்தியானந்தன் என நீளும் அந்த 42 பெயர்களைக் கொண்ட பட்டியலில் நீங்களும் ஒருவராக இருந்து சிங்களப் பேரினவாதத்தின் பல முகங்களில் ஒன்றான சிறைக் கொடுமைகளையும் அனுபவித்து நெஞ்சில் உரம் ஏற்றிக் கொண்டீர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டவரலாற்றில் இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய நீர்வேலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து தமிழ் ஈழத்தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, தேவன் உட்படப் பல போராளிகள் 1981 இல் கைது செய்யப்பட்டு 1983 இல் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டபின், “ என்றும் எங்கள் தலைவன் தங்கத்துரை “ என்ற கோஷத்துடன் இயக்கத்தைக் கட்டிக் காத்து சமகால இயக்கங்களுடன் ஏற்படும்போது முன்னிலை வகிக்கும் பல தாக்குதல்களை மக்களின் பாதுகாப்புடன் நடாத்தி சிங்கள அரசு இயந்திரத்தை ஆட்டங்காண வைத்து தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டீர்கள்.
தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டபோது இருந்த அதே இராணுவக் கெடுபிடிகள்தான் இன்றும் யாழ்மண்ணில் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. 1995 இல் இரவோடிரவாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அங்கே திரும்பச் செல்லும் சூழ்நிலைகள் உருவாக்கப்படவில்லை. சுமார் 38 ஆண்டு காலப்போராட்டம் யாழ்மண்ணிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும் சாதித்த சாதனைகள்தான் என்ன என்பது இன்று பெரியதொரு கேள்விக்குறியாக மாறி நெஞ்சில் உதிரத்தை கொட்டவைக்கிறது.
களநிலவரங்கள் நாளும் கவலைதருவனவாகவே இருக்கின்றன. நாளை விடியும் நமக்கெல்லாம் ஒரு வாழ்வு மலரும் என்று கண்ட கனவுகள் பொய்த்துப்போகுமோ என்று எண்ணிக்கலங்கும் அளவிற்கு சர்வதேச அழுத்தங்களும் உட்கட்சிப்போராட்டங்களும் தலைவிரித்து ஆடுகின்றன. தமிழன்னையின் பல்லாயிரக்கணக்கான செல்வங்கள் தங்கள் உயிர் உடைமைகளைத் துறந்து கட்டிஎழுப்பிய இந்தப்போராட்டம் கருகிப்போகாமலிருக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒருமித்த கருத்துடனும் தூயதமிழ் உணர்வுடனும் போராட்டம் நடத்தினாலே தவிர போராட்டம் வெற்றிபெறும் சாத்தியமில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்துகொண்டு ஏகோபித்த இயக்கமாக அல்லாமல் ஏகோபித்த தமிழர்களாக ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம்.
1981 இல் தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப்போராட்ட வீரர் nஐகன் ஆகியோரின் மணற்காட்டுக் காட்டிக் கொடுப்புடன் தமிழீழ விடுதலை இயக்கம் அழிந்துவிடும் என்று கனவு கண்டவர்களின் எண்ணங்களில் இடி விழுந்ததுபோல தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி எழுப்பிய விதம் கண்டு மலைத்துப்போனவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே குளிர்பானத்தில் நஞ்சூட்டிக் கொலை செய்ய முயன்ற முயற்சிகளும் தோற்றுப்போக, ஈழத்தேசிய விடுதலை முன்னனியில் நான்காவதாக வந்து நாமும் இணைகிறோம் என்று நாடகமாடி, உட்கட்சிப் போராட்டத்தில் சகதோழர்களின் உயிர்கள் பாதுகாக்கப் படுவதற்காக ஆயுதங்கள் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருந்தவேளையில் தொடுத்த தாக்குலில் நீங்கள் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டீர்கள்.
தாயக விடுதலையொன்றே தாரக மந்திரமாகக்களத்திலே போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் ஒற்றுமையின் பெயரால் ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு அரசியல் வறுமை காரணமாக ஸ்ரீலங்கா அரசு செய்து முடிக்கவேண்டிய வேலையைத் தாமே செய்துமுடித்து எதிரியின் கைகளைப் பலப்படுத்திப் போராட்டத்தைச் சிதைவடையச்செய்த தமிழின விரோதசக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தலைவனுக்கும், தமிழீழ மண் மீPட்புப்போராட்டத்தில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்துப்போராளிகளுக்கும் எமது வீரவணக்கங்கள்.
“என்றும் எங்கள் தலைவர் தேசபிதா தங்கத்துரை, கொள்கைக்குன்றம் தளபதி குட்டிமணி”
தமிழீழ விடுதலை இயக்கம.
Monday, 12 May 2008
புலிகளின் சகோதரப் படுகொலையை நினைவுகூரும் 22வது ஆண்டு - TELO 22வது ஆண்டு May 10th
10 மே 2008 இல் டோட்முண்ட் ஜேர்மனியில் எமது தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாளான, இன்று அவர்களையும் எமது இயக்கத்தில் இருந்த தமிழர் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தோழர்களையும், பொது மக்களையும் அதே நேரத்தில் இதர இயக்களில் தியாகம் செய்த போராளிகளையும் நினைவு கூர்ந்துள்ளோம்.
எமது ரெலோ போராளிகளும் நாமும் புலிகளின் கடந்தகாலப் படுகொலைகளில் இருந்து இன்றுவரை மீளமுடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான நிலையில் உள்ளோம். இது எமது அன்றாட வாழ்விலும் அரசியல் உறவுகளிலும் கூட மிகுந்த பாதிப்புக்களைக் கொண்டவர்களாகவே வாழுகின்றோம்.
இந்த படுகொலை செய்யப்பட்ட நாளில்
1.எமது தலைவர் சிறீசபாரத்தினத்தையும் தோழர்களையும் புலிகள் படுகொலை செய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2. எமது தமிழ் போராட்ட இயக்கங்கள் தம்மிடையேயும் தமிழர்களிடையேயும் கொலை செய்வதை நிறுத்த நிபந்தனையின்றி எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.
3.தமிழர்களுக்கான அரசியற்தீர்வை அடைய எல்லா ஜனனாயக முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.4.தமிழ் அமைப்புக்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு உடனடியாக முன்வரவேண்டும்என்றும் கோருகின்றோம்.
பிற்குறிப்பு:- இதர தமிழ் அமைப்புகளும் இதிற் பங்குகொண்டன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)
எமது ரெலோ போராளிகளும் நாமும் புலிகளின் கடந்தகாலப் படுகொலைகளில் இருந்து இன்றுவரை மீளமுடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான நிலையில் உள்ளோம். இது எமது அன்றாட வாழ்விலும் அரசியல் உறவுகளிலும் கூட மிகுந்த பாதிப்புக்களைக் கொண்டவர்களாகவே வாழுகின்றோம்.
இந்த படுகொலை செய்யப்பட்ட நாளில்
1.எமது தலைவர் சிறீசபாரத்தினத்தையும் தோழர்களையும் புலிகள் படுகொலை செய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2. எமது தமிழ் போராட்ட இயக்கங்கள் தம்மிடையேயும் தமிழர்களிடையேயும் கொலை செய்வதை நிறுத்த நிபந்தனையின்றி எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.
3.தமிழர்களுக்கான அரசியற்தீர்வை அடைய எல்லா ஜனனாயக முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.4.தமிழ் அமைப்புக்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு உடனடியாக முன்வரவேண்டும்என்றும் கோருகின்றோம்.
பிற்குறிப்பு:- இதர தமிழ் அமைப்புகளும் இதிற் பங்குகொண்டன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)
Wednesday, 23 April 2008
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நினைவுகூரும் வீரமைந்தர்கள்
தினம்தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தோழர் சிறி சபாரட்ணத்தின் தலைமையை ஏற்று ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது வீரமைந்தர்களின் தியாகங்கள் அளப்பரியவை.
எமது ஈழ விடுதலைப் போராட்டம் திசை திருப்பப்பட்டு பாசிச புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் நிமித்தம் புலிகள் தமது பாசிச கொள்கையை பரவவிட்டு எம்மியக்கத்தின் உன்னதமான செயலதிபர் சிறிசபாரத்தினம் உட்பட பல தோழர்களையும் காவு கொண்டு இரு தசாப்தங்களுடன் ஈராண்டுகள் முடிவுற்றாலும் எம் இதயங்களில் வாழுகின்ற அந்த வீர மைந்தர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
புலிப்பாசிசம் பகிரங்கமாக சகோதரப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட சித்திரை மாதம் முப்பாதாம் திகதி முதற் கொண்டு மே மாதம் ஆறாம் திகதி வரையான அந்த துரோகம் விளைந்த நாட்களை வீரமைந்தர்கள் தினம் எனக் கொண்டு அவர்களின் தியாகங்களை உள்ளங்களில் இருத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்துமுகமாக இந்த புனித தினங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற இருக்கின்ற அஞ்ஞசலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் தோழமையுடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
‘நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டவர்களோ அல்ல: மாறாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள்” - தேசபிதா தங்கத்துரை.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தொடர்புகட்கு :-
0049 - 1733 932 687
0049 - 1520 458 5172
0049 - 1701 786 194
எமது ஈழ விடுதலைப் போராட்டம் திசை திருப்பப்பட்டு பாசிச புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் நிமித்தம் புலிகள் தமது பாசிச கொள்கையை பரவவிட்டு எம்மியக்கத்தின் உன்னதமான செயலதிபர் சிறிசபாரத்தினம் உட்பட பல தோழர்களையும் காவு கொண்டு இரு தசாப்தங்களுடன் ஈராண்டுகள் முடிவுற்றாலும் எம் இதயங்களில் வாழுகின்ற அந்த வீர மைந்தர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
புலிப்பாசிசம் பகிரங்கமாக சகோதரப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட சித்திரை மாதம் முப்பாதாம் திகதி முதற் கொண்டு மே மாதம் ஆறாம் திகதி வரையான அந்த துரோகம் விளைந்த நாட்களை வீரமைந்தர்கள் தினம் எனக் கொண்டு அவர்களின் தியாகங்களை உள்ளங்களில் இருத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்துமுகமாக இந்த புனித தினங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற இருக்கின்ற அஞ்ஞசலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் தோழமையுடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
‘நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டவர்களோ அல்ல: மாறாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள்” - தேசபிதா தங்கத்துரை.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தொடர்புகட்கு :-
0049 - 1733 932 687
0049 - 1520 458 5172
0049 - 1701 786 194
Subscribe to:
Comments (Atom)